1851 - ம் ஆண்டு கையேட்டில் வாலாஜாபாத் ஆற்காடு மறைப்பணித்தளத்தின் கிளைத்தளமாக குறிப்பிடப்படுகிறது .1888 - ம் ஆண்டைய கத்தோலிக்க கையேட்டில் வாலாஜாபாத் பழைய மைலாப்பூர் மறைமாவட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது . குருக்கள் பற்றிய குறிப்புக்கள் இல்லையென்றாலும் , 1000 விசுவாசிகள் அங்கு வாழ்ந்ததாக குறிப்புகள் காணப்படுகிறது . இதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாலாஜாபாத்தின் 83 - வது இளம் காலாட் படை பிரிவு அங்கு இருந்ததாகவும் அதில் நிறைய கத்தோலிக்கர்கள் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது . அந்த காலக்கட்டத்தில் பழைய சென்னை உயர்மறைமாவட்டத்தின் ஆளுகைக்கு கொள்ளை நோயான காலராவினால் படை பிரிவினரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இறந்து போயினர் . அவர்களின் கல்லறைமன் இன்றும் காணப்படுகிறது . இட்டந்தாங்கல் பங்கு உருவானபோது வாலாலாபாத் அதன் கிளை பங்காக்கப்பட்டது . 1981 வாலாஜாபாத்தை அன்றைய சென்னை - மயிலை பேராயர் மேதரு லூயிஸ் மத்தியாஸ் தனிப்பங்காக உயர்த்தினார் . இந்த பங்கு சென்னை கப்பூச்சின் மறைப்பணி மையம் தங்களின் மறைப்பணித்தலமாக தொடங்கியதாரும் . இம்மறைப்பணித்தலத்தின் சிற்றாலயமும் , கல்லறையும் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது . அந்த சிற்றாலயத்தின் பாதுகாவலர் புனித பிரான்சிஸ் அசிசியார் . இது அதனுடைய கடைசி கப்பூச்சின் மறைப்பணியாளர் அருள்பணி . கான் பாப்டிஸ்ட் அவர்களால் சென்னை விக்கர் அப்போஸ்தலிக் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது . 1886 - ல் புதிய சென்னை உயர்மறைமாவட்டம் உருவான போது விக்கர் அப்போஸ்தலிக்கிடம் இருந்து சென்னை உயர்மறைமாவட்டத்திற்கு வர மறைமாவட்ட எல்லைகள் சீரமைக்கப்பட்ட போது இப்பகுதி மைலாப்பூர் மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் வந்தது , 1953 . நவம்பரில் சென்னை , மயிலை மறைமாவட்டங்கள் இணைந்து சென்னை - மயிலை உயர்மறைமாவட்டம் உருவானபோது பேராயர் லூயிஸ் மத்தியாஸ் வாலாஜாபாத்தை தனிப்பங்காக உருவாக்க விரும்பி பங்கு இல்லம் அமைத்து 1961 டிசம்பர் 12 - ம் தேதி அர்ச்சித்தார் . 1964 . ஜூலை 28 - ம் நாள் பேராயரின் உடல்நலக்குறைவு காரணமாக அவருடைய செயலுரிமையோடு அன்றைய முதன்மை குரு பேரருட்திரு . பெரையராடி அந்ராதே புதிய ஆலயத்தை அர்ச்சித்தார் அருள்பணி . லூயிஸ்ராயர் - பங்குத்தந்தை , மடிப்பாக்கம் !
நாள் மற்றும் கிழமை | நிகழ்வுகள் | வாசகங்கள் | சிறப்பிப்போர் |
---|---|---|---|
02-04-2024 செவ்வாய் |
புனித அந்தோணியார் நவநாள் (6.00மணிக்கு இறை இரக்கத்தின் ஜெபமாலை மற்றும் 6.30 திருப்பலி) |
திருப்பாடல் 2 : 36-41 யோவான் 20:11-18 |
பங்கு மக்கள் |
05-04-2024 வெள்ளி |
ஆராதனை (6.30 மணிக்கு ஜெபமாலை , திருப்பலி மற்றும் நற்கருனை ஆராதனை) |
திருப்பாடல் 4: 1-12 யோவான் 21: 1-14 |
பங்கு மக்கள் |
07-04-2024 ஞாயிறு |
பாஸ்கா ஞாயிறு 2 , (8.30 மணிக்கு திருச்செபமாலை மற்றும் திருப்பலி) |
திருப்பாடல் 4: 32-35 1யோவான் 5: 1-6 யோவான் 20:19-31 |
அன்பியம் |
11-04-2024 வியாழன் |
புனித லூர்து மாதா நவநாள் (6.00மணிக்கு ஜெபமாலை மற்றும் 6.30 திருப்பலி) |
திருப்பாடல் 5: 27-33 யோவான் 3: 31-36 |
அன்பியம் |
14.04.2024 ஞாயிறு |
பாஸ்கா ஞாயிறு 3 (8.30மணிக்கு திருச்செபமாலை மற்றும் திருப்பலி) |
திருப்பாடல் 3: 13-15 லூக்கா 24: 35-48 |
அன்பியம் |
20-04-2024 சனி |
ஊத்தூக்காடு பாத யாத்திரை (5.30 மணிக்கு தேர்பவனி ) |
திருப்பாடல் 9:31-42 யோவான் 6 : 60-69 |
அன்பியம் |
21-04-2024 |
பாஸ்கா ஞாயிறு 4 (காலை 8.30மணிக்கு செபமாலை மற்றும் திருப்பலி) |
திருப்பாடல்4: 8-12 1யோவான் 3:1-12 யோவான் 10: 11-18 |
அன்பியம் |
27-04-2024 சனி |
சிலுவைப்பாதை (6.30 மணிக்கு திருச் செபமாலை, சிலுவைப்பாதைமற்றும் திருப்பலி) |
திருப்பாடல் 13:44-52 யோவான் 14: 7-14 |
அன்பியம் |
28-04-2024 |
பாஸ்கா ஞாயிறு 5 | திருப்பாடல் 9:26-31 1யோவான் 3: 18-24 யோவான்15:1-8 |
அன்பியம் |